Saturday, September 29, 2007

இந்து மதவெறி சக்திகளுக்கு சாவு மணி அடித்து சவப்பாடை ஊர்வலம் - படங்கள்

பெரியார் திராவிடர் கழகம் சார்பில் 28-09-2007 அன்று, புதுச்சேரியில், இராமர் பாலம் என்ற பெயரில் தமிழருக்கும், தமிழ்நாட்டிற்கும் எதிரான பார்ப்பன, இந்து மதவெறி சக்திகளுக்கு சாவு மணி அடித்து, சவப்பாடை ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தின் முடிவில் இந்து மத வெறியன் வேதாந்தியின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

ஊர்வலத்திற்கு பெரியார் தி.க. தலைவர் லோகு.அய்யப்பன் தலைமை தாங்கினார்.

விடுதலைச் சிறுத்தைகள் அமைப்புச் செயலாளர் அரசு.வணங்காமுடி, மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன், மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் தங்க.கலைமாறன், மீனவ மக்கள் முன்னேற்ற இயக்கத் தலைவர் பா.சக்திவேல், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை அமைப்பாளர் சி.மூர்த்தி, செந்தமிழர் இயக்க அமைப்பாளர் ந.மு.தமிழ்மணி, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகரி, புரட்சிப் பாவலர் இலக்கியப் பாசறை தலைவர் பொ.தாமோதரன், சமூக நீதிப் போராட்டக் குழு சார்பில் அ.மஞ்சினி, வெள்ளையணுக்கள் இயக்கம் சார்பில் பாவல், செம்படுகை நன்னீரகம் செயலாளர் பார்த்திபன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

பெரியார் தி.க. அமைப்பாளர் இர.தந்தைபிரியன், செயலாளர் சு.விசயசங்கர், பொருளாளர் வீரமோகன், துணைத் தலைவர் இரா.வீராசாமி, இளைஞர் அணித் தலைவர் சா.சார்லசு, செயலாளர் செ.சுரேசு, செய்தி தொடர்பாளர் ம.இளங்கோ உட்பட ஏராளமான கழகத் தோழர்கள் கலந்துக் கொண்டனர்.

ஊர்வலத்தைத் தடுத்த காவல்துறையினரோடு மோதல் ஏற்பட்டது. காவல்துறை தடுத்தையும் தாண்டி ஊர்வலத்தினர் முன்னேறி வேதாந்தியின் உருவ பொம்மையை எரித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட 150-க்கும் மேற்பட்ட தோழர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.















Tuesday, July 17, 2007

புதுவையில் நடிகவேள் எம்.ஆர்.இராதா நூற்றாண்டு விழா















புதுச்சேரி பெரியார் திராவிடர் கழகத்தலைவர் திரு .லோகு. அய்யப்பன் உரையாற்றுகிறார்.



திரைப்பட இயக்குநர் திரு .சீமான் உரையாற்றிய போது.............

பெரியார் திராவிடர் கழகத்தலைவர் திரு கொளத்தூர் தா.செ.மணி அவர்களின் எழுச்சி உரையின் போது...............

திரளாக கலந்து கொண்ட மக்களின் ஒரு பகுதியினர்..............



தந்தைப் பெரியாரின் உண்மைத் தொண்டராகவும், பகுத்தறிவு கொள்கைகளை நாடகங்கள், திரைப்படங்கள், வாயிலாக பரப்பியவரும் தமிழ்த் திரை உலகின் ஈடு இணையற்ற நடிகருமான நடிகவேள் எம். ஆர், ராதா அவர்களின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் 14 சூலை 2007 சனி மாலை அரியாங்குப்பத்தில் புதுச்சேரி மாநில பெரியார் திராவிடர்க் கழகம் சார்பில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு பெரியார் திராவிடர்க் கழக துணைத்தலைவர் திரு. இரா. வீராச்சாமி தலைமை ஏற்றார் ஆ. ஆனந்தன், இரா.பெருமாள் முன்னிலை வகித்தனர்.

செ. சுரேசு வரவேற்புரையாற்றினார்.

நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் புதுச்சேரி மாநில பெரியார் திராவிடர்க் கழகத்தலைவர் லோகு. அய்யப்பன் தொடக்க உரை ஆற்றினார்.

பெரியார் திராவிடர் கழகத்தலைவர் தோழர். கொளத்தூர். தா. செ. மணி மற்றும், பெரியாரிய கொள்கைப் பற்றாளரும் திரைப்பட இயக்குனருமான சீமான் சிறப்புரையாற்றினாகள்.

பெரியார் திராவிடர்க் கழகத்தின் மாநிலச் செயலாளர் வி. விசைசங்கர், பொருளாளர் வீர மோகன், இளைஞர் அணி அமைப்பாளர் தந்தைப்பிரியன், இளைஞர் அணித் தலைவர் சா. சார்லசு, துணைச் செயலர் கோ. இராசேந்திரன் செய்தித் தொடர்பாளர் ம. இளங்கோ மற்றும் பெரியார் திராவிடர்க் கழகப் பொருப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ச. தீனதயாளன் நன்றி கூறினார்.

எழுச்சிகரமாக நடந்த கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தந்தை பெரியாரின் போர் வாளாக விளங்கிய எம். ஆர். இராதா அவர்களின் ஈடு இணையற்ற தொண்டை போற்றுவோம்.

பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் "தமிழகம் முழுவதும் நடிகவேள் எம். ஆர். இராதா அவர்களின் நூற்றாண்டு விழா நடத்தப்படும்" என்று இக்கூட்டத்தில் அறிவித்தார்.