Sunday, April 12, 2009

புதுச்சேரியில் ஈழத்தமிழர்கள் மீது எரிகுண்டு வீசியதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

இந்திய இராணுவத்தின் நேரடியான ஆதரவோடு ஈழத்தமிழர் மீது இரசாயன குண்டுகளை வீசி ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொடூர படுகொலையை கண்டித்து புதுச்சேரி பெரியார் திராவிடர் கழகம் சார்பாக மாபெரும் ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் புதுச்சேரி பெரியார் திராவிடர் கழக தலைவர் லோகு.அய்யப்பன் உணர்ச்சி பெருக்குடன் கண்டன முழக்கமிட்டதுடன் இத்தாலி சோனியாவின் காங்கிரஸை இத்தேர்தலில் இல்லாமல் செய்வதன் மூலம் மீதமுள்ள ஈழத்தமிழர்களையாவது காப்பாற்ற முடியும் என்பதால் வந்திருந்த அனைவரும் காங்கிரஸை வீழ்த்துவதற்கான வேலையை செய்ய வேண்டும் என அனைவரின் காலில் விழுந்து கேட்பதாக கண்ணீர் மல்க கூறினார்.ஆர்பாட்டத்தில் நூற்றுக்கனக்கான பெரியார் தி.க தோழர்களும் ஈழ ஆதரவு தோழமை அமைப்பினரும் கலந்துகொண்டனர்.